கூட்டுறவு வங்கியில் கல்வி கடன் பெறுவது எப்படி..? TN Cooperative Bank Education Loan - 2025

 கூட்டுறவு வங்கியில் கல்வி கடன் பெறுவது எப்படி..?

மிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படும் நிலையில், ரூ.1,00,001 முதல் ரூ.5,00,000 வரை அளிக்கப்படும் கடனுக்கு 100% பிணையம் பெறப்பட வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வக கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும். கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக் குழு மூலம் நிர்ணயம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்ற விதி பின்பற்றப்படும். இந்திய குடிமகன், 30 வயதுக்குட்பட்டோர் இந்த கல்விக் கடனை பெற தகுதியானவர்கள். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டயப்படிப்புகள் (Diploma courses), தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள் (UG Degrees including Professional courses), முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவரின் பெற்றோர் கட்டாயமாக இணை விண்ணப்பதாரராக  சேர வேண்டும் என்றும், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்படாதபட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் இக்கடனுக்கும் பொருந்தும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
  1. 1. விண்ணப்பம்:
    நீங்கள் இனைய வழியில் கூட்டுறவு வங்கியின் கல்வி கடனை விண்ணபிக்கலாம்.
  2. 2. தேவையான ஆவணங்கள்:
    • ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை, போன்ற அடையாள ஆவணங்கள். 
    • கல்வி நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம். 
    • படிப்புக்கான கட்டண விவரங்கள். 
    • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமான சான்று. 
    • மற்ற ஆவணங்கள் (வங்கி கேட்கும் ஆவணங்கள்). 
  3. 3. விண்ணப்பம் சமர்ப்பித்தல்:
    அனைத்து ஆவணங்களையும் படிவத்துடன் இணைத்து, வங்கியின் கிளை மேலாளருக்கு சமர்ப்பிக்கவும். 
  4. 4. பரிசீலனை:
    வங்கி உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் வழங்குவது பற்றி முடிவு எடுக்கும். 
  5. 5. கடன் பெறுதல்:
    கடன் ஒப்புதல் பெற்றால், நீங்கள் கடன் தொகையை வங்கி மூலம் பெற்றுக்கொள்ளலாம். 
தகுதிகள்:-
  • இந்திய குடிமகன்.
  • 30 வயதுக்குட்பட்டோர்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள்.
  • படிப்புக்கான தகுதி (பட்டப்படிப்பு, தொழில்முறை படிப்பு). 
முக்கிய குறிப்பு: கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்வி கடனின் வட்டி விகிதம் மற்றும் கடன் விதிமுறைகள் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, நீங்கள் விண்ணப்பிக்கும் முன், வங்கியின் கிளை மேலாளரை அணுகி, அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை
close