மாஃபா அறக்கட்டளையின் கல்வி ஊக்கத்தொகைத்திட்டம் 2025 -26
சத்யபாமா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அன்பு அறக்கட்டளை மற்றும் மாஃபா அறக்கட்டளை இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய 25 மாணவ மாணவிகளுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கலை,அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் இலவசமாக பயில வாய்ப்பு உள்ளது.
நோக்கம்:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிறை கல்வியில் சிறந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவியரின் கல்வித்தரத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் நோக்காமாகும்.
பயன்கள்:
ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு கல்வி,விடுதி,மற்றும் போக்குவரத்து கட்டணம் இலவசம். மேலும் மாணவ மாணவியருக்கு தலைமைத்துவ பண்பு மேம்பட சிறப்பு முகாம்கள் மற்றும் தன்னார்வ தொண்டுகளில் ஈடுபடுத்தப்பட்டு செம்மைப்படுத்தப்படுவார்கள்.
ஊக்கத் தொகைத்திட்டத்தில் சேரத்தகுதிகள் :
1.பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை.
2. 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 முதல் 85 சதவீததிற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள்.
3. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவிகள்
(மாத வருமானம் ரூபாய் 10,000 - க்கும் குறைவானவர்கள் வருமான சான்றிதழ் அவசியம்) 4. தந்தையை இழந்து தாயின் ஆதரவில் வாழும் குழந்தைகள்.
5. மாணவ மாணவிகள் நேர் முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-05-2025
தொடர்புக்கு : 95001-22814