Instant Farmar Loan | விண்ணப்பித்த அன்றே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகள் பயிர்க் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கிக் கணக்கில் தொகை பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன் பெறும் இத்திட்டம் மூலம், அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் ஸ்டாலின் (ஆக. 17 ) தருமபுரியில், அரசு விழா தொடங்கும் முன்பு, கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தொடக்கி வைத்தார்.

விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தின் மூலம் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

இதில் ரூ. 512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தில் நீங்களும் பயன்பெற கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.




கருத்துரையிடுக

புதியது பழையவை